free website hit counter

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போது, ​​கொழும்பில் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, ​​கொழும்பில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவருமான சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய பயணத்தின் போது, ​​மின்சாரம், எரிசக்தி, சுகாதாரம், பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) நடைபெற்ற விழாவில், வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான 'மித்ர விபூஷண' விருதை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க வழங்கினார்.

மீண்டும் பொருளாதார-வர்த்தக வீழ்ச்சி நிகழ்ந்தால் நாடு தாங்காது என்பதை அரசு உணர வேண்டும்   தனி ஒரு நாடாக, இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 விகிதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமாரபுரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா, இன்று (05) காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று, இன்று இரவு (04) கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அரசு முறைப் பயணமாக இலங்கை வந்தடைந்தார்.

மற்ற கட்டுரைகள் …