சுமார் 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நாவின் உலக் சுகாதார அமைப்பின் 74 ஆவது உலக சுகாதரக் கூட்டத் தொடரான WHA இன்று திங்கட்கிழமை காணொளி வாயிலாக ஆரம்பமானது.
மியான்மாரில் நீதிமன்றத்தில் ஆங் சான் சூகி நேரடி ஆஜர்!
மியான்மாரில் பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த அந்நாட்டின் அரச தலைவரான ஆங் சான் சூகி 3 மாதங்கள் கழித்து திங்கட்கிழமை முதன்முறையாக நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசிகளைப் பாதுகாக்க அமெரிக்க உதவியை நாடும் பாகிஸ்தான்
உலகளவில் கொரோனா தடுப்பூசிக்கு தேவை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தினால், வறிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தை பங்கிட்டு வழங்கும் ஐ.நாவின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் தடுப்பூசிகளைப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும் IAEA இற்கும் இடைப்பட்ட அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி!
மே 22 ஆம் திகதியுடன் ஈரானுக்கும் ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு ஏஜன்ஸியான IAEA இற்கும் இடைப்பட்ட 3 மாத அளவு கொண்ட அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை ஈரானின் பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலத்தீனம் இடையே சமரச முயற்சியில் அமெரிக்க, எகிப்து வெளியுறவு அமைச்சர்கள்
சுமார் 11 நாட்கள் நீடித்த இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான கடும் மோதல் போக்கு எகிப்தின் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருமுறை முடிவுக்கு வந்துள்ளது.
சீனாவில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் : பலர் காயம்
நேற்றிரவு சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
பைசர் தடுப்பு மருந்தை ஒரு மாதம் வரை குளிர் சாதனப் பேட்டியில் சேமிக்க அமெரிக்கா அனுமதி!
உலகளவிலும், அமெரிக்காவிலும் பரவலாகப் பயன்படுத்தப் படும் தடுப்பு மருந்தான பைசர் மற்றும் பயோண்டெக்கின் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டி வெப்ப நிலையில் சுமார் ஒரு மாதம் வரை அமெரிக்காவில் சேமித்து வைக்கலாம் என அமெரிக்க சுகாதார ஒழுங்கு ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.