free website hit counter

 இந்த மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் நடந்த ஒரு சோதனைப் பாதையில் BYD இன் யாங்வாங் U9 “எக்ஸ்ட்ரீம்” சூப்பர் கார், மணிக்கு 496.22 கிமீ (மணிக்கு 308 மைல்கள்) என்ற அதிவேக வேகத்தைப் பதிவு செய்ததாக சீன மின்சார வாகன உற்பத்தியாளர் கூறினர்.

இது ஒரு தயாரிப்பு காருக்கான சாதனையாகும், இது 2019 ஆம் ஆண்டில் புகாட்டியின் சிரோன் சூப்பர் ஸ்போர்ட் அமைத்த 490.5 கிமீ / மணி (304.7 மைல்) வேகத்தை எளிதில் முறியடித்தது மற்றும் உலகின் அதிவேக கார் என்ற பட்டத்தை ஒரு EV பெற்ற முதல் முறையாகும்.

Xtreme என்பது சீனாவில் சுமார் $233,000 விலையில் BYD இன் குழிகளில் இருந்து குதிக்கும் ஹைப்பர் காரான யாங்வாங் U9 இன் உயர் செயல்திறன் கொண்ட பதிப்பாகும்.

மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்ன் மற்றும் பேட்டரி அமைப்பைக் கொண்ட அதிவேக மாறுபாட்டின் 30 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று BYD தெரிவித்துள்ளது.

இதன் பொருள் உலகின் மலிவான மின்சார வாகனங்களைப் பெருமைப்படுத்துவதோடு, சீனா இப்போது வேகமான கார்களின் தாயகமாகவும் உள்ளது.

ஆசிய வல்லரசில் மின்சார வாகன ஏற்றுக்கொள்ளல் உலகின் பிற பகுதிகளை விட மிக அதிகமாக உள்ளது, கடந்த ஆண்டு புதிய கார் விற்பனையில் மின்சார வாகனங்கள் 50% வரை இருந்தன.

மின்சார வாகனங்களுக்கான வளர்ந்து வரும் வரவேற்பு மற்றும் கடுமையான போட்டி நிறைந்த கார் சந்தை - 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் வாடிக்கையாளர்களுக்காகப் போராடுகின்றன - புதுமையின் வெடிப்பைத் தூண்டியுள்ளது.

பல சீன வாகன உற்பத்தியாளர்கள் இப்போது தன்னாட்சி ஓட்டுநர் மற்றும் AI அம்சங்களை தரநிலையாக வழங்குகிறார்கள், மேலும் பேட்டரி மாற்றுதல் போன்ற எதிர்கால தொழில்நுட்பம் சீன சாலைகளில் ஒரு பொதுவான காட்சியாக மாறி வருகிறது.

 

இத்தாலியில் காசாவை ஆதரித்து யூனியன் சிண்டகேல் டி பேஸ் (USB) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து, ​​இத்தாலி முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பல இடங்களிலும், வன்முறைகள் வெடித்தன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழக கற்பித்தல் அமைப்பிலிருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபான் அரசாங்கம் நீக்கியுள்ளது. புதிய தடையின் ஒரு பகுதியாக, மனித உரிமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் கற்பிப்பதையும் இது தடை செய்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒன்றரை மில்லியன் ஆஸ்திரேலியர்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வதால் ஆபத்தில் உள்ளனர் என்று ஒரு முக்கிய காலநிலை அறிக்கை எச்சரித்துள்ளது.

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது.

நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர்.

இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றது.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் திங்கள்கிழமை காலை குவிந்த இளைஞர்கள் சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது.

இதையடுத்து, இளைஞர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், சமூக ஊடக செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நேபாள அரசு நேற்றிரவு திரும்பப் பெற்றது.

மேலும், இளைஞர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சரும், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் அமைச்சரும் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

ஆனால், அரசின் ஊழலுக்கு எதிராக இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காத்மண்டுவில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

நாடாளுமன்றக் கட்டடம், அமைச்சரவைக் கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், பிரதமரின் தனிப்பட்ட இல்லம், அமைச்சர்களின் இல்லங்கள், காவல் நிலையம், சாலையில் நின்ற வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் நிலைமை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மீறியது.

இந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக சர்மா ஓலி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த சர்மா ஓலி, அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, நேபாள தலைநகர் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: