free website hit counter

இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை: பாதுகாப்புச் செயலாளர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். 

நாடு பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என பொய்ப்பிரச்சாரம் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சும், முப்படையினரும், சட்டஅமுலாக்கல் தரப்பினரும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction