free website hit counter

உக்ரைனில் தொடரும் யுத்தம் காரணமாக கடந்த பத்து நாட்களில், 1.3 மில்லியன் உக்ரேனிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது அடுத்து வரும் சில நாட்களிலேயே 1.5 மில்லியனைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போருக்கு எதிராக இன்று வீதிகளுக்கு வந்து கூடினார்கள். இன்று காலை சூரிச் நகரத்தில் சுமார் 20,000 பேர் வரை பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவநடவடிக்கையும், உக்ரைனின் எதிர்ப்பும் என கடந்த மாதம் 24ந் திகிதி ஆரம்பமாகிய யுத்தம் இன்று பத்தாவது நாளாகவும் தொடர்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புத் தொடங்கி ஒரு வாரத்தை நெருங்கும் நிலையில் போர் கடுமையாகியுள்ளது. உக்ரைன் நகரான கார்கிவ் மீது இராணுவ பராட்ரூப்பர்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ரஷயா தொடுத்துள்ளது.

உக்ரைன் யுத்தம் வலுவடைந்து வரும் நிலையில், 12 மில்லியன் உக்ரைன் மக்களுக்கு உதவி தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா மோதல்களின் ஆறாவது நாள் இன்று. கியேவை நோக்கி இராணுவம் முன்னேறுகிறது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மாஸ்கோ மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளார்.

உக்ரைன்  ரஷ்ய படையெடுப்பின் நேரடி விளைவாக சுவிற்சர்லாந்தில் எரிபொருளின் விலை அதிகரிக்க  வாய்ப்புள்ளது. 

மற்ற கட்டுரைகள் …