free website hit counter

தமிழக காவல்துறையில் 1997ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த கோவை பெண் காவலர்கள், காவல் துறையில் 25-வது ஆண்டில்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …