free website hit counter

தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும், தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ந் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இன்று தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லியில், பாரதப்பிரதமர் நரேந்திரமோடியை நேற்று நேரில் சந்தித்தார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதன் பின்னதாக நடைபெற்ற முதலும், முக்கியத்துவம் மிக்கதுமான சந்திப்பாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் இது அமைந்தது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் அவர் டெல்லிக்கு விஜயம் செய்யும் முதல் பயணம் இது.

தமிழகத்தில் கடுமையாகத் தாக்கம் செலுத்திய கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், 50 சதவீத பேருந்துகளை இயக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகரான டெல்லி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முடங்கிப்போனது. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில் அங்கு இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளை மக்கள் வெளியே நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிவருகிறது.

மும்பை மாநகரத்திற்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது அடுத்தடுத்த கடைகளைக்கும் பரவியதால் பதற்றம் நிலவியது.

மற்ற கட்டுரைகள் …