free website hit counter

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இன்று கடைசி நாள். இரண்டையும் இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

அன்மையில் துபாய் சென்று திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை நேரில் சந்திப்பதற்காக டெல்லி செல்கின்றார்.

கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது.

சர்வதேச விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையமாக இந்தியா திகழ்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48வது மாநாடு பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

மோசடி செய்யப்பட்டுள்ளன மொத்த நிதியில் 84.61 சதவீதம், வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: