free website hit counter

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா நுழைவதா இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் ஒரு முடிவை எடுக்கப்படும் என வியாழக்கிழமை வாஷிங்டனில் இருந்து பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை முன்வந்தார்.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் கடந்த இரவு இஸ்ரேல் மீது அதிகளவிலான ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டது.ஈரானின் புதிய ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் புகழ்பெற்ற (Iron Dome) இரும்பு வளைய வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக உடைத்துள்ளன.

செவ்வாய்க்கிழமை ஏழு தலைவர்கள் குழு (G7) இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை உறுதிப்படுத்தியதுடன், டெல் அவிவ் தெஹ்ரானுடன் இராணுவத் தாக்குதல்களை நடத்துவதால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு ஒரு தீர்வு காண அழைப்பு விடுத்தது.

'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில்,  தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என, ஈரான் மீது இஸ்ரேல் தொடங்கிய இராணுவ நடவடிக்கையைத்  தொடர்ந்து, இரு தரப்பும் பரஸ்பரம் தொடர்ந்து வான் வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தங்கள் தாக்குதல்களை ஈரானியர்களும் இஸ்ரேலியர்களும் விரிவுபடுத்திய பின், இரு நாடுகளிலும் புகையும், இடிபாடுகளும் நிறைந்திருந்தன.

ஈரான் முழுவதும், குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில்,  பல தளங்கள் மற்றும் இலக்குகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது, இதன் விளைவாக ஏராளமானோர் உயிரிழந்தனர், மற்றும் காயமடைந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: