free website hit counter

மியான்மாரில் பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த அந்நாட்டின் அரச தலைவரான ஆங் சான் சூகி 3 மாதங்கள் கழித்து திங்கட்கிழமை முதன்முறையாக நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டுள்ளார்.

உலகளவில் கொரோனா தடுப்பூசிக்கு தேவை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தினால், வறிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தை பங்கிட்டு வழங்கும் ஐ.நாவின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் தடுப்பூசிகளைப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மே 22 ஆம் திகதியுடன் ஈரானுக்கும் ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு ஏஜன்ஸியான IAEA இற்கும் இடைப்பட்ட 3 மாத அளவு கொண்ட அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை ஈரானின் பாராளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 11 நாட்கள் நீடித்த இஸ்ரேல் பாலத்தீனம் இடையேயான கடும் மோதல் போக்கு எகிப்தின் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருமுறை முடிவுக்கு வந்துள்ளது.

உலகளவிலும், அமெரிக்காவிலும் பரவலாகப் பயன்படுத்தப் படும் தடுப்பு மருந்தான பைசர் மற்றும் பயோண்டெக்கின் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டி வெப்ப நிலையில் சுமார் ஒரு மாதம் வரை அமெரிக்காவில் சேமித்து வைக்கலாம் என அமெரிக்க சுகாதார ஒழுங்கு ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி முதல் மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்து வந்த பொது மக்களில் சுமார் 802 பேர் வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: