free website hit counter

ஜேர்மனியில் ஒரேநாளில் 52,000 க்கும் அதிகமான கோவிட் நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனியில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தினை மறுபடியும் நடத்துவதற்கு ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில், சென்றவாரம் நடைபெற்ற முக்கிய தடுப்பூசி பிரச்சாரம் வெற்றியடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் மீண்டும் கோவிட் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பண்டிகைக் காலத்தில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீளவும் விதிக்கப்படுமா ? எனும் ஐயம் பரவலாகக் காணப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் கடந்த ஆறுமாதங்களில், இணையவழித் திருட்டுக்கள் அதிகரித்திருப்பதாக, CRIF கண்காணிப்பகம் எச்சரித்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதகாலத்துள் 56% மாக இணையத் திருட்டுக்கள் அதிகரித்திருப்பதாக, அதன் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாலியில் அடுத்த வரும் சில நாட்களில் நாடு முழுவதும் கனமழை, புயல், மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சில மாநிங்களில் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் அதிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிய வருகிறது.

மற்ற கட்டுரைகள் …