நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், தீய திராவிட மாடல் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில், பணமோசடி வழக்கில் இந்தியாவின் காந்தி குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இந்தியாவின் நிதிக் குற்றவியல் நிறுவனம் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மற்றும் பலர் மீது பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, புதன்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நடிகர் கேப்டன் விஜயகாந்தை புகழ்ந்த இந்திய பிரதமர்
தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், இளைஞர்களின் வாக்குகளை கவர திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு புதிய பதவிகளை வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக தரப்பில் பேசப்படுகிறது.
பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தடை: டெல்லி மாநில அரசு அதிரடி
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுக்காக ஆண்டுதோறும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆளிக்கும் ஒரே மாநிலம் டெல்லி. டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் அமல்: மீன் விலை அதிகரிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும்.