free website hit counter

தமிழகத்தில் வரும் செப். 15 ஆம் திகதிக்குள் நடத்தபடாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடவுள்ளது. இது திமுக ஆட்சிக்கு வந்த பின் கூடும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடதக்கது.

அனைத்து நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிராத்திப்பதாக பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும், தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ந் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இன்று தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைநகர் டெல்லியில், பாரதப்பிரதமர் நரேந்திரமோடியை நேற்று நேரில் சந்தித்தார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதன் பின்னதாக நடைபெற்ற முதலும், முக்கியத்துவம் மிக்கதுமான சந்திப்பாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் இது அமைந்தது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் அவர் டெல்லிக்கு விஜயம் செய்யும் முதல் பயணம் இது.

தமிழகத்தில் கடுமையாகத் தாக்கம் செலுத்திய கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், 50 சதவீத பேருந்துகளை இயக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …