free website hit counter

இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 20 ந் திகதி தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்துவதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் புதுச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில், சென்னை வடபழனியை சேர்ந்த 47 வயதான ஜிம் உரிமையாளர் அண்ணா நகரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் 11 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வருவது, ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் இன்றைய தினதில் நூற்றாண்டு விழா பாராதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வரும் 15 ஆம் திகதி முதல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என, அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் மோகன் யாதவ் அறிவித்து உள்ளார்.

மற்ற கட்டுரைகள் …