free website hit counter

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டது.

மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ATM-களில் போதுமான அளவு விநியோகிக்கப் படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் ராணுவத் தாக்குதலை நடத்த இந்தியா உத்தேசித்துள்ளதாக நம்பத்தகுந்த உளவுத்துறையிடம் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம் என குறிப்பிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று
தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: