free website hit counter

இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதின் பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கலந்து கொள்ளும் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று திருச்சியில் இடம்பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார்.

கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றபோது மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

அதிகாரப்பூர்வ சுகாதார எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளை வெப்ப அலை சூழ்ந்துள்ள நிலையில், இந்த கோடையில் தென்னிந்தியாவில் இதுவரை குறைந்தது 16 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 24) தெரிவித்தனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத்  தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தவெகவின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மேலும் இரு புதியவர்கள் இன்று அமைச்சர்களாக, ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.

மற்ற கட்டுரைகள் …