free website hit counter

உதயநிதி ஸ்டாலின் கைது, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

தமிழக அரசின் 2026 - 2027 வரவு செலவு அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழக எதிர்கட்சித் தலைவர் திரு. உதயநிதி.

தஞ்சையில், முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததாகத் தொடரப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தஞ்சை காவல்துறை கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, உதயநிதியை கைது செய்ய தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெறவிருக்கும் நிலையில், 11 மணியளவில், விசாரணைக்காக உதயநிதியை தஞ்சை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப் போக்கை கண்டிப்பதாக கூறி, தஞ்சாவூரில் திமுக சாா்பில் பனகல் கட்டடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழக முதல்வர் விஜய் குறித்து கடுமையாக விமரிசித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று காலை அவரது வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிறகு, உதயநிதி வீட்டுக்குள் சென்ற காவல்துறையினர் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். உடனடியாக உதயநிதி தன்னுடைய வழக்குரைஞர்களுடன் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடினர்.

எனினும், அவரை தஞ்சை காவல்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உதயநிதியின் வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகவும் பகல் 12 மணி வரை அவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், தஞ்சை காவல்துறை, உதயநிதியை கைது செய்திருக்கிறார்கள். காவல் வாகனத்திலேயே அவர் தஞ்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஆக. 4) மாலை நடைபெறுகிறது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு தீர்வில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.

மற்ற கட்டுரைகள் …