பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் மூட முடிவு செய்த ஆறு நாட்களுக்குப் பிறகு, புது தில்லி தனது வான்வெளியை பாகிஸ்தானுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் மூடுவதன் மூலம் பரஸ்பர நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு உதவ தயார் - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேட்டி
சாதிவாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை வடிவமைக்க உதவ தயாராக உள்ளோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: இந்திய அரசு அறிவிப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவால் சில்லரை தட்டுப்பாடு நீங்குமா?
மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ATM-களில் போதுமான அளவு விநியோகிக்கப் படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
24-36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் ராணுவத் தாக்குதலை நடத்த இந்தியா உத்தேசித்துள்ளதாக நம்பத்தகுந்த உளவுத்துறையிடம் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை தெரிவித்தார்.
2026-ல் ஒரே வெர்ஷன் அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி
2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அதிமுக வெர்ஷன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
‘முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்’ - இந்திய பிரதமர் மோடி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.