தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி அக்கட்சி தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவை காங்கிரசால் மட்டுமே வீழ்த்த முடியும் - ராகுல் காந்தி திட்டவட்டம்
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
முதல்வரின் பதிலை கேட்கும் தமிழக மக்களின் காதுகள் பாவமில்லையா? - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு குற்றங்களை தடுக்கும் நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே? என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, உயர்கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே எல்லாவற்றுக்கும் தீர்வு - சீமான் ஆவேசம்
நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், தீய திராவிட மாடல் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில், பணமோசடி வழக்கில் இந்தியாவின் காந்தி குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இந்தியாவின் நிதிக் குற்றவியல் நிறுவனம் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மற்றும் பலர் மீது பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, புதன்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.