இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொய் வாக்குறுதிகளை தருவதாக, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - இல்லத்தரசிகள் கவலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்ட விரோதம் : இந்திய உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை; 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்று, இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
சொந்த மாநிலத்தில் வேலையை தேடுங்கள் : ராகுல் காந்தி அறிவுரை
பீகார் இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்லக்கூடாது ; சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றார்.
தமிழ்நாடு அமைச்சரின் உறவினர்கள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அமைச்சர் கே.என். நேருவின் மகன், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேண்டாம் என்றோம், விரும்பினார்கள் , ஒரேமேடையில் !
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருவரும் ஒரே மேடையில் இணைந்து நின்றனர்.
தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்
தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியை ஒதுக்க, இந்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் வேறுபல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.