free website hit counter

இலங்கை அரசியல் கள நிலவரங்கள் நிமிடத்திற்கு நிமிடம் பரபரபாகிக் கொண்டுள்ளது. தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய கேட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர்.

இலங்கையில் நாடாளவிய ஊரடங்கு இருந்து வரும் நிலையில், டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்ட நேரத்தில், நாட்டின் எந்தவொரு பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் கூடாது எனும் மற்றுமொரு தடை உத்தரவு நாடாளவியரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைகள் காரணமாக, இந்திய இராணுவத்தின் உதவி கோரப்பட்டதாகவும், இந்தியப்படைகள் தென்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தம் உன்மைக்குப் புறம்பானவை.

இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் காரணமாக, நாடு முழுவதற்குமான அவசரகாலச்சட்டம் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முதல் இந்த அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …