free website hit counter

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் கொழும்பு திரும்புவதற்காக திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மற்றும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

வாக்கு அரசியலை முதன்மைத் தெரிவாகக் கொண்டவர்களில் அநேகர், அடுத்தவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் உத்தியை அரசியல் செல்நெறியாகக் கொண்டவர்கள். அவர்களினால் சமூகத்துக்கு எந்த நன்மையும் எந்தக் காலத்திலும் ஏற்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் சுயநலனுக்கான ஓட்டத்தில் குறியாக இருப்பார்கள். அதற்காக யாரையும் எந்த நேரத்திலும் முதுகில் குத்துவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்படியானவர்கள், அர்ப்பணிப்போடு எழுந்த தமிழ்த் தேசிய அரசியலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதுதான், பெரும் சாபக்கேடு. 

பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்குப் பிறகு திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி வெள்ளிக்கிழமை எச்சரித்தது.

இலங்கை முழுவதிலும் உள்ள 336 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கான வருடாந்த பரிசுப் பொதிகள் விநியோகம் இன்று (ஏப்ரல் 13) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சமகி ஜன பலவேகய (SJB) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L. பீரிஸ் மற்றும் ஏனையோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி மற்றும் பழங்கள் சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: