free website hit counter

தமிழ்நாடு முதலமைச்சருக்கு குற்றங்களை தடுக்கும் நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே? என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, உயர்கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், தீய திராவிட மாடல் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் நிதிக் குற்றவியல் நிறுவனம் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மற்றும் பலர் மீது பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, புதன்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், இளைஞர்களின் வாக்குகளை கவர திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு புதிய பதவிகளை வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக தரப்பில் பேசப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: